Monday, December 10, 2012
வலி
கண்ணீர் சிந்தும் கண்களை விட...
புன்னகை சிந்தும் உதடுகளுக்கே...
வலி அதிகம்.
Sunday, December 9, 2012
அன்பு
எப்போதும் மறக்காமல்
இருப்பது அன்பு அல்ல...
என்ன நடந்தாலும்
வெறுக்காமல் இருப்பது தான்
உண்மையான அன்பு...!!
Friday, November 30, 2012
அழகு
தெரியாத காற்றும்...
புரியாத கவிதையும்...
கலையாத கனவும்...
பிரியாத காதலும்...
என்றுமே அழகு தான்.
நட்பு
சொல்ல முடியாத சோகத்தையும்...
தாங்க முடியாத துன்பத்தையும்...
உண்மையான நட்பிடம் மட்டுமே
பகிர்ந்து கொள்ள முடியும்.
கவிதை
பிரிவை நினைத்து கவிதை எழுதினேன்...
காகிதம் நனைந்து விட்டது.
பிறகு தான் தெரிந்தது...
வந்தது கவிதை இல்லை...
கண்ணீர் என்று.
Monday, November 19, 2012
நேசம்
அடிக்கடி பார்க்கின்ற யாரையும்
நேசிக்க முடியாது. ஆனால்...
அதிகமாக நேசிக்கின்ற யாரையும்
அடிக்கடி பார்க்க முடியாது.
திரும்பாது
தொலைந்து போகும் அன்பு...!
மறந்து போகும் உறவுகள்...!
கலைந்து போகும் கனவுகள்...!
கடந்து போகும் நாட்கள்...!
எதுவும் திரும்பக் கிடைப்பதில்லை.
கண்ணீர்
பிரிந்து போன நினைவுகள் ஒவ்வொரு
நாளும் வந்து கொண்டு தான் இருக்கும்.
கனவாக அல்ல...
கண்ணீராக.
Friday, November 16, 2012
பலவீனம்
என்று நீ ஒரு உயிரின் மீது
அளவற்ற அன்பு கொள்கிறாயோ...
அந்த நொடி முதல் மனதால்
நீ பலவீனமடைகிறாய்.
மௌனம்
"ஒரு மனிதனை துடிக்க வைக்கும்
மிகப் பெரிய ஆயுதம் ...!"
அவன் அதிகமாக நேசிக்கும் ஒரு
உறவின் "மௌனம்"!.
மறக்க முடியாது
தேடித் தேடி நேசித்த ஒருவரை
ஒரு நாள் வெறுக்கலம். ஆனால்
ஒரு நாளும் மறக்க முடியாது.
Tuesday, November 13, 2012
நான்
நான் எப்படி ஒருவருக்கு
அடிமையாக இருக்க முடியாதோ...
அது போல் தான் நான் யாருக்கும்
எஜமானராகவும் இருக்க முடியாது.
சாதனை
சிகரத்தை அடைவது சாதனை இல்லை...
அங்கேயே நீடித்து நிலைப்பது தான்
உண்மையில் உயர்ந்த சாதனை.
வாழ்க்கை
சிலர் எவ்வளவு முயன்று தேடினாலும்
எதுவும் எளிதாகக் கிடைப்பதில்லை.
சிலருக்கு எளிதாகக் கிடைத்தாலும் கிடைத்ததை
நிரந்தரமாகத் தக்க வைக்கத் தெரிவதில்லை.
Wednesday, October 31, 2012
ஒருவர்
நம்மை அதிகமாக சிரிக்க வைப்பதும்
அதிகமாக அழ வைப்பதும்
நாம் அதிகமாக நேசிக்கும்
ஒருவரால் மட்டுன் தான் முடியும்
ஏமாற்றம்
உண்மையான அன்புக்கு ஏமாற்றத் தெரியாது...
ஏமாற மட்டுமே தெரியும்.
Wednesday, October 24, 2012
மௌனம்
இன்பமான நேரங்களில் மௌனம் "சம்மதம்"
ப்ரியமானவர்களைப் பிரியும் போது மௌனம் "துன்பம்"
நட்பில் மௌனம் "நம்பிக்கை"
காதலில் மௌனம் "சித்ரவதை"
தோல்வியில் மௌனம் "பொறுமை"
வெற்றியில் மௌனம் "அடக்கம்"
இறுதியில் மௌனம் "மரணம்"
தாஜ்மஹால்
காதல் இல்லாமல் வாழும் மனிதனுக்குக்
கோவில் கூட கல்லறை தான்...
காதலுடன் வாழும் மனிதனுக்குக்
கல்லறை கூட கோவில் தான்.
சிந்திப்பு
எதையும் சிந்தித்து செய்தால்
நமக்கு கிடைப்பது "வெற்றி"
ஆனால்
எதையும் செய்துவிட்டு சிந்தித்தால்
நமக்கு கிடைப்பது "அனுபவம்"
நேசம்
உண்மையான நேசம் இருந்தால்...
வார்த்தைகள் தேவையில்லை.
நினைவுகள் கூட பேசும்.
Sunday, October 21, 2012
பாதை
நீ நடக்க பாதை இல்லையென கவலை கொள்ளாதே...
நீ நடந்தால் அதுவே உனக்கு பாதை ஆகி விடும்.
Saturday, October 20, 2012
வலி
உனக்குள் துடிக்கும் இதயத்தின்
வலியை விட ...
உனக்காக மட்டுமே துடிக்கும் இதயத்துக்கு
வலி அதிகம்.
உன இதயத்தை விட உனக்காகத் துடிக்கும்
இதயத்தை நேசி.
கனவு
உன்னுள் இருக்கும் ஒரு கனவை...
உன்னால் மட்டுமே நிஜமாக்க முடியும்.
Thursday, October 18, 2012
காயங்கள்
எல்லோரின் இதயத்திலும் காயங்கள் உண்டு...
அதை வெளிப்படுத்தும் விதம் தான் வித்தியாசம்.
நண்பர்களிடம் கண்ணீராக....
மற்றவர்களிடம் புன்னகையாக.
சிரிப்பு
உன் மனம் வலிக்கும் போது சிரி...
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை.
- சார்லி சாப்ளின்
Monday, October 15, 2012
வித்தியாசம்
வெற்றிக்கும் தோல்விக்கும்
சிறு வித்தியாசம் தான்...
கடமையை செய்தால் "வெற்றி"
கடைமைக்குச் செய்தால் "தோல்வி"
தோல்வி
தோல்வியில் இருந்து எதையும்
கற்றுக் கொள்ளவில்லை என்றால்...
அதுதான் உண்மையான தோல்வி.
Saturday, October 13, 2012
அன்பு
புரியாத அன்பிற்கு அருகில்
இருந்தும் பலனில்லை.
புரிந்து கொண்ட அன்பிற்கு
பிரிவு ஒரு தூரமும் இல்லை.
வாழ்க்கை
வாழ்வது ஒருமுறை தான்.
அந்த வாழ்க்கையை உனக்கு பிடித்தவர்களோடு
வாழ்ந்து பார்...
வாழ்க்கையின் அர்த்தம் புரியும்.
Friday, October 12, 2012
மனசாட்சி
மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பவன்
ஒரு நாள் வெற்றி பெறுவான்.
மனசாட்சி சொல்வதைக் கேட்டு நடப்பவன்
ஒவ்வொரு நாளும் வெற்றி பெறுவான்.
பிரிவு
நான் திரும்பாத பயணம் "என் மரணம்"
அதுவரை...
நான் விரும்பாத பயணம் "உன் பிரிவு"
Tuesday, October 9, 2012
நடிப்பு
ஒரு பெண்ணைப் பார்க்கும் போது
ஆணின் இதயம் துடிக்கும்.
ஆனால்...
ஒரு ஆணைப் பார்க்கும் போது
பெண்ணின் இதயம் நடிக்கும்.
Friday, September 28, 2012
அன்பு
செடியில் இருக்கும் பூக்களை நேசிப்பதை விட ...
உதிர்ந்த பூக்களை நேசித்துப் பாருங்கள்.
செடியில் இருக்கும் பூக்கள் கூட உதிர்ந்து விடும் ...
உங்கள் அன்புக்காக
.
Thursday, September 27, 2012
நினைவுகள்
நிஜங்கள் தரும் சந்தோஷத்தை விட...
நினைவுகள் தரும் சந்தோஷம் அதிகம்.
நிஜங்கள் நிலைப்பதில்லை...
நினைவுகள் அழிவதில்லை.
மன்னிப்பு
மன்னிப்பதில் நீ நல்லவனாக இரு...
ஆனால் அவர்களை மீண்டும் நம்பி
முட்டாளாக இருந்து விடாதே
நேசம்
உன் கண்கள் அழும் போது...
ஆறுதல் சொல்ல முதலில் ஓடி வருபவர்...
நீ நேசித்தவராக இருக்க மாட்டார்.
உன்னை நேசித்தவராகத் தான் இருப்பார்.
Thursday, September 13, 2012
மறக்க முடியாது
யாருக்காக சிரித்தாயோ அவளை
ஒரு வேளை மறந்து விடலாம்! ஆனால்
யாருக்காக அழுதாயோ அவளை
ஒரு நாளும் உன்னால் மறக்க முடியாது!
Monday, August 13, 2012
நேசி
உனக்காக எதையுமே இழப்பவர்களை விட...
எதற்க்காகவும் உன்னை இழக்காதவர்களை நேசி.
அது தான் உண்மையான அன்பு
Tuesday, August 7, 2012
உண்மை
உனக்காக சிரிக்கும் உதடுகளை விட...!!
உனக்காக கண்ணீர் விடும் கண்களை நேசி...!!
அது உப்பாக இருந்தாலும் உண்மையாக இருக்கும்...!!
Monday, August 6, 2012
எதிர்பார்க்கிறேன்
உன்னை 'எதிரில்' பார்த்த நாட்களை விட,
'எதிர்' பார்த்த நாட்களே அதிகம்.
இன்னும் உன்னை நான் 'எதிர் பார்க்கிறேன்,
'எதிரில்' பார்க்க...
Saturday, August 4, 2012
அன்பு
என்னை வெல்வதற்கு யாரும் இல்லை...
உன் அன்பைத் தவிர...
அது போலவே என்னைக் கொல்வதற்கும் யாரும் இல்லை...
உன் பிரிவைத் தவிர...
Tuesday, July 10, 2012
அய்யோ...அய்யோ.....
Sunday, July 8, 2012
சுவாசம்
நீ என்னை நேசிப்பதற்கே யோசிக்கிறாய்...
நான் உன்னை நேசிக்கவே சுவாசிக்கிறேன்.
நினைவுகள்
நான் வாழத் துடிக்கிறேன். என்னை
மறந்த உன்னோடு அல்ல...
என்னை உண்மையாக நேசித்த உன்
இதயத்தின் நினைவுகளோடு...
Saturday, July 7, 2012
Happy Birthday To SANTHOS
2 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Happy Birthday To SANTHOS (07.07.2012)
Monday, July 2, 2012
பொருள்
விளைவுகளை ஏற்படுத்தாத எந்த ஒரு வார்த்தையும் வீண்.
Saturday, June 30, 2012
அழுகை
என் தலையணை மட்டுமே அறியும்...
என் தாய்க்கும் நண்பனுக்கும் தெரியாத
சில கண்ணீர் துளிகள் !!!
பெண் பாசம்
சில பெண்கள் பொழியும் பாசம்...
கருநாகப் பாம்பு உமிழும் விஷம்.
இரண்டுமே மெல்ல மெல்ல தான் கொல்லும்.
Wednesday, June 27, 2012
பெண்
ஒவ்வொரு ஆண்களின் வெற்றிக்குப்
பின்னால் மட்டுமல்ல...
ஒவ்வொரு ஆண்களின் தோல்விக்குப்
பின்னாலும் பெண் தான் இருக்கிறாள்.
Tuesday, June 26, 2012
புரிதல்
புரிந்து கொண்டால் கோபம் கூட
அர்த்தம் உள்ளதாய் தெரியும் .
புரிந்து கொள்ளாவிட்டால் அன்பு கூட
அர்த்தம் இல்லாமல் போய்விடும் .
அன்பு
உண்மையான அன்புக்கு மட்டுமே
உன் கண்ணீர் துளிகள் தெரியும்...
நீ மழையில் நனைந்து கொண்டே
அழும் போது கூட...
Life
Thursday, June 21, 2012
GMAIL (PVA), YOUTUBE, MYSPACE, TAGGED, FACEBOOK NON - PVA ACCOUNTS AVAILABLE
WHO'S NEED BULK EMAIL ACCOUNTS PLEASE CONTACT ME :
Gmail = elangolike
Yahoo = elangolikes
skype = elangolike
Friday, June 15, 2012
7.7.2010
S Technologies
S Technologies
அழகு
Life
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)