Friday, November 30, 2012

அழகு

தெரியாத காற்றும்...
புரியாத கவிதையும்...
கலையாத கனவும்...
பிரியாத காதலும்...
என்றுமே அழகு தான்.

நட்பு

சொல்ல  முடியாத சோகத்தையும்...
தாங்க முடியாத துன்பத்தையும்...
உண்மையான நட்பிடம் மட்டுமே
பகிர்ந்து கொள்ள முடியும்.

கவிதை

பிரிவை நினைத்து கவிதை எழுதினேன்...
காகிதம் நனைந்து விட்டது.
பிறகு தான் தெரிந்தது...
வந்தது கவிதை இல்லை...
கண்ணீர் என்று.

Monday, November 19, 2012

நேசம்

அடிக்கடி பார்க்கின்ற யாரையும்
நேசிக்க முடியாது. ஆனால்...
அதிகமாக நேசிக்கின்ற யாரையும்
அடிக்கடி பார்க்க முடியாது.

திரும்பாது

தொலைந்து போகும் அன்பு...!
மறந்து போகும் உறவுகள்...!
கலைந்து போகும் கனவுகள்...!
கடந்து போகும் நாட்கள்...!
எதுவும் திரும்பக் கிடைப்பதில்லை.

கண்ணீர்

பிரிந்து போன நினைவுகள் ஒவ்வொரு
நாளும் வந்து கொண்டு தான் இருக்கும்.
கனவாக அல்ல...
கண்ணீராக.

Friday, November 16, 2012

பலவீனம்

என்று நீ ஒரு உயிரின் மீது
அளவற்ற அன்பு கொள்கிறாயோ...
அந்த நொடி முதல் மனதால்
நீ பலவீனமடைகிறாய்.

மௌனம்

"ஒரு மனிதனை துடிக்க வைக்கும் 
மிகப் பெரிய ஆயுதம் ...!"
அவன் அதிகமாக நேசிக்கும் ஒரு 
உறவின் "மௌனம்"!.

மறக்க முடியாது

தேடித் தேடி நேசித்த ஒருவரை
ஒரு நாள் வெறுக்கலம். ஆனால்
ஒரு நாளும் மறக்க முடியாது.

Tuesday, November 13, 2012

நான்

நான் எப்படி ஒருவருக்கு 
அடிமையாக இருக்க முடியாதோ...
அது போல் தான் நான் யாருக்கும்
 எஜமானராகவும் இருக்க முடியாது.

சாதனை

சிகரத்தை அடைவது சாதனை இல்லை...
அங்கேயே நீடித்து நிலைப்பது தான் 
உண்மையில் உயர்ந்த சாதனை. 

வாழ்க்கை


சிலர் எவ்வளவு முயன்று தேடினாலும்
எதுவும் எளிதாகக் கிடைப்பதில்லை. 
சிலருக்கு எளிதாகக் கிடைத்தாலும் கிடைத்ததை 
நிரந்தரமாகத் தக்க வைக்கத் தெரிவதில்லை.