Friday, September 28, 2012

அன்பு

செடியில் இருக்கும் பூக்களை நேசிப்பதை விட ...
உதிர்ந்த பூக்களை நேசித்துப் பாருங்கள்.
செடியில் இருக்கும் பூக்கள் கூட உதிர்ந்து விடும் ...
உங்கள் அன்புக்காக.

Thursday, September 27, 2012

நினைவுகள்

  நிஜங்கள் தரும் சந்தோஷத்தை விட...

  நினைவுகள் தரும் சந்தோஷம் அதிகம்.

நிஜங்கள் நிலைப்பதில்லை...

நினைவுகள் அழிவதில்லை.

மன்னிப்பு

மன்னிப்பதில் நீ நல்லவனாக இரு...

ஆனால் அவர்களை மீண்டும் நம்பி

முட்டாளாக இருந்து விடாதே 

நேசம்

உன் கண்கள் அழும் போது...

ஆறுதல் சொல்ல முதலில் ஓடி வருபவர்...

நீ நேசித்தவராக இருக்க மாட்டார்.

உன்னை நேசித்தவராகத் தான் இருப்பார்.

Thursday, September 13, 2012

மறக்க முடியாது

யாருக்காக சிரித்தாயோ அவளை

ஒரு வேளை மறந்து விடலாம்! ஆனால்

யாருக்காக அழுதாயோ அவளை

ஒரு  நாளும் உன்னால் மறக்க முடியாது!