Wednesday, October 31, 2012

ஒருவர்

நம்மை அதிகமாக சிரிக்க வைப்பதும்
அதிகமாக அழ வைப்பதும்
நாம் அதிகமாக நேசிக்கும் 
ஒருவரால் மட்டுன் தான் முடியும்

ஏமாற்றம்

உண்மையான அன்புக்கு ஏமாற்றத் தெரியாது... 
ஏமாற மட்டுமே தெரியும்.

Wednesday, October 24, 2012

மௌனம்

இன்பமான நேரங்களில் மௌனம்  "சம்மதம்"
ப்ரியமானவர்களைப் பிரியும் போது மௌனம்  "துன்பம்"
நட்பில்  மௌனம்  "நம்பிக்கை"
காதலில் மௌனம்  "சித்ரவதை"
தோல்வியில் மௌனம்  "பொறுமை"
வெற்றியில் மௌனம்  "அடக்கம்"
இறுதியில் மௌனம்  "மரணம்"

தாஜ்மஹால்

காதல் இல்லாமல் வாழும் மனிதனுக்குக்
 கோவில் கூட கல்லறை தான்...
காதலுடன் வாழும் மனிதனுக்குக்
கல்லறை கூட கோவில் தான்.




சிந்திப்பு

எதையும் சிந்தித்து செய்தால்
நமக்கு கிடைப்பது "வெற்றி"
ஆனால்
எதையும் செய்துவிட்டு சிந்தித்தால்
 நமக்கு கிடைப்பது "அனுபவம்"

நேசம்

உண்மையான நேசம் இருந்தால்... 
வார்த்தைகள் தேவையில்லை.
நினைவுகள் கூட பேசும்.

Sunday, October 21, 2012

பாதை

நீ நடக்க பாதை இல்லையென கவலை கொள்ளாதே...
நீ நடந்தால் அதுவே உனக்கு பாதை ஆகி விடும்.

Saturday, October 20, 2012

வலி

உனக்குள் துடிக்கும் இதயத்தின் 
வலியை விட ... 
உனக்காக மட்டுமே துடிக்கும் இதயத்துக்கு
வலி அதிகம்.
உன இதயத்தை விட உனக்காகத் துடிக்கும் 
இதயத்தை நேசி.

கனவு

உன்னுள் இருக்கும் ஒரு கனவை... 
உன்னால் மட்டுமே நிஜமாக்க முடியும். 

Thursday, October 18, 2012

காயங்கள்

எல்லோரின் இதயத்திலும் காயங்கள் உண்டு...
அதை வெளிப்படுத்தும் விதம் தான் வித்தியாசம். 
நண்பர்களிடம் கண்ணீராக.... 
மற்றவர்களிடம் புன்னகையாக. 

சிரிப்பு

உன் மனம் வலிக்கும் போது சிரி... 
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை.
                                                         - சார்லி சாப்ளின்

Monday, October 15, 2012

வித்தியாசம்

வெற்றிக்கும் தோல்விக்கும் 
சிறு வித்தியாசம் தான்... 
கடமையை செய்தால் "வெற்றி" 
கடைமைக்குச் செய்தால் "தோல்வி" 

தோல்வி

தோல்வியில் இருந்து எதையும் 
கற்றுக் கொள்ளவில்லை என்றால்... 
அதுதான் உண்மையான தோல்வி. 

Saturday, October 13, 2012

அன்பு

புரியாத அன்பிற்கு அருகில் 
இருந்தும் பலனில்லை. 
புரிந்து கொண்ட அன்பிற்கு 
பிரிவு ஒரு தூரமும் இல்லை. 

வாழ்க்கை

வாழ்வது ஒருமுறை தான். 
அந்த வாழ்க்கையை  உனக்கு பிடித்தவர்களோடு
வாழ்ந்து பார்... 
வாழ்க்கையின் அர்த்தம் புரியும். 

Friday, October 12, 2012

மனசாட்சி

மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பவன் 
ஒரு நாள் வெற்றி பெறுவான். 
மனசாட்சி சொல்வதைக் கேட்டு நடப்பவன்  
ஒவ்வொரு நாளும் வெற்றி பெறுவான். 

பிரிவு

நான் திரும்பாத பயணம் "என் மரணம்" 
அதுவரை... 
நான் விரும்பாத பயணம் "உன் பிரிவு" 

Tuesday, October 9, 2012

நடிப்பு

ஒரு பெண்ணைப் பார்க்கும் போது 
ஆணின் இதயம் துடிக்கும்.
ஆனால்...
ஒரு ஆணைப் பார்க்கும் போது
 பெண்ணின் இதயம் நடிக்கும்.